தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை பெருக்க நடவடிக்கை தேவை : வாசன்
Ex.Centra; Minister and now TMC PRESIDENT Thiru.VASAN DEMANDS MORE RAILWAY FACILITIES FOR TAMILNADU.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ரயில் போக்குவரத்து வசதியை பெருக்குவதில் மத்திய அரசு, 2015-16 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் போக்குவரத்து சேவையை நிவர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட குறிப்பாக ஏற்கனவே தொடங்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள சென்னை - கன்னியாகுமரி வழியில் உள்ள விழுப்புரம் - திண்டுக்கல் அகல ரயில் பாதையை இரட்டை அகல வழிப்பாதையாக மாற்றுதல், மதுரை - போடி நாயக்கனூர் மீட்டர் வழிப்பாதையை அகல வழிப்பாதையாக மாற்றுதல், பொள்ளாச்சி - பாலக்காடு மீட்டர் வழிப்பாதையை அகல வழிப்பாதையாக மாற்றுதல். மதுரை...
more... - மேலூர் - காரைக்குடி வழியில் புதிய அகல ரயில் பாதை அமைத்தல். மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைத்தல் - ஆகிய திட்டங்களுக்கு போதிய நிதிகள் ஒதுக்கப்பட்டு, பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, மதுரை - பெங்களூருக்கு நேரடி ரயில்; விருதுநகரிலிருந்து - மதுரை வழியாக - திண்டுக்கல் சென்று திரும்பும் நேரடி ரயில்; கன்னியாகுமரியிலிருந்து - ஹைதராபாத்திற்கு - திருப்பதி வழியாக நேரடி ரயில் - ஆகிய புதிய ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மூன்றாவதாக சென்னையிலிருந்து - மானாமதுரை வரை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் - செங்கோட்டை வரை நீட்டித்தல்; கொல்லம் - மதுரை எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டித்தல்; திருச்சிராப்பள்ளியிலிருந்து - திருநெல்வேலி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வரை நீட்டித்தல் - அகிய திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் திட்டம் முடிக்கப்பட வேண்டும். மதுரையிலிருந்து செங்கொட்டைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் கூடி வருகிறது.
பேருந்து கட்டணம் ரயில் கட்டணத்தை விட அதிகம். ஆகவே வளர்ந்து வரும் தேவையைக் கவனத்தில் கொண்டு, நாள் ஒன்றுக்கு மூன்று முறை இயங்கும் மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் ரயில் ஐந்து முறை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் தென் தமிழ் நாட்டு மக்கள் நேரடியாக புதுச்சேரி செல்ல ரயில் வசதி இல்லை. ஆகவே தற்போது வாரம் ஒரு முறை இயங்கி வரும் கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நாள்தோறும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக உயர்த்த வேண்டும்.
வடசென்னை - ராயபுரத்தில் மூன்றாவது ரயில் நிலையம் அமைக்கும் பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து அப்பணியை விரைவுப் படுத்த வேண்டும் என தமிழக மக்களின் சார்பாக ரயில்வே அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்.